ஜனவரி 26ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான், அஜீத் குமாரின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. கோச்சடையான் ரிலீஸாவதால் பொங்கலுக்கு பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்கையில் கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். கமல் படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தை போன்று இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் முக்கிய நடிகர்களின் படங்களாக ரிலீஸாவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
கோச்சடையான் மட்டும் 700 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யார் படத்திற்கும் பாதிப்பில்லாமல் படங்களை வெளியிட ஆலோசனை நடந்து வருகிறதாம்.
2014ம் ஆண்டு பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா
படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது ரஜினியின்
கோச்சடையான் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜீத், விஜய்
படங்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்
கோச்சடையான். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே
நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா,
ருக்மணி, நாசர், ஆதி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில்
நடித்துள்ளனர். ரஜினி, அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
ரஜினி உடல்நலம் சரியில்லாமல் போய் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த
பிறகு நடித்துள்ள படம் இது. முதன்முறையாக ரஜினி 3டி அனிமேஷன் படத்தில்
நடித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு
பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்டசரிங் தொழில்நுட்பம் கோச்சடையான் படத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிராபிக்ஸ், பின்னணி இசை
உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வந்தன. அதேசமயம் ஏற்கனவே
இப்படத்தின் சிறிய டீஸர் ஒன்றும், ஒருபாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது.
முன்னதாக கோச்சடையான் படத்தை ரஜினியின் பிறந்தநாளில் டிசம்பர் 12 அன்று
வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது அதுவும் தள்ளிபோய் உள்ளது.
படத்தை பொங்கலுக்கு முன்னதாக ரிலீஸ் பண்ணுகின்றனர்.
ஜனவரி 10-ல் கோச்சடையான் ரிலீஸ்
இதுகுறித்து கோச்சடையான் படத்தின் இணை தயாரிப்பாளரும், மீடியா ஒன்
அதிபருமான டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ளதாவது, படத்திற்கான அனைத்துப்
பணிகளும் முடிந்து, இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடக்கிறது.
டிசம்பரில் ஆடியோவை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம், ஆனால் தேதி முடிவாகவில்லை.
ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கும் விதமாக பொங்கலுக்கு
சில தினங்கள் முன்னர் அதாவது ஜனவரி 10ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய
திட்டமிட்டுள்ளோம். அதற்கான விளம்பர பணிகள் அடுத்த மாதம் துவங்குகிறது
என்று கூறியுள்ளார்.
அஜீத்-விஜய் படங்களுக்கு சிக்கல்
இதனிடையே ஏற்கனவே அஜீத்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும்
பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரது படம்
ரிலீஸானாலே தமிழகத்தில் அநேக தியேட்டர்களை கைப்பற்றி விடுவர்,
அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும்.
அப்படி இருக்கையில் இருவரது படங்களும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு
இருப்பதால் எப்படி தியேட்டர்களை ஒதுக்குவது என்று இப்போதே
விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் குழம்பியுள்ளனர்.
இந்நிலையில் ரஜினியின் கோச்சடையான் படமும் ரிலீஸாவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரஜினி படம் என்றாலே வசூல் அள்ளிவிடலாம்
என்பது தியேட்டர் அதிபர்கள் கருத்து. இதனால் தியேட்டர் அதிபர்கள் அவருக்கு
தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதனால் இந்த பொங்கலுக்கு அநேக தியேட்டர்கள் கோச்சடையானுக்கு தான்
அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் அஜீத், விஜய் படங்களுக்கு தியேட்டர்
குறைவாவதுடன், வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. எனவே
கோச்சடையான் ரிலீஸ்க்கு சிலவாரங்கள் கழித்து வீரம், ஜில்லா படங்களை ரிலீஸ்
செய்யலாமா அல்லது அதற்கு முன்பாகவே ரிலீஸ் செய்யலாமா என படக்குழு யோசித்து
வருகிறது. இதனால் வீரம், ஜில்லா படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘விஸ்வரூபம்-2′ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில், தீவிரமாக இருக்கும் கமல், அடுத்ததாக, ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவுள்ளார்
.
பிரபல கன்னட நடிகர், ரமேஷ் அரவிந்த் இயக்கப் போகும், இந்த படத்தில்,
புதிய கூட்டணியுடன், கைகோர்த்துள்ளர்.கமல். அவருக்கு ஜோடியாக, முதல்
முறையாக, காஜல் அகர்வால் நடிக்கிறாராம்.
காமெடிக்கு, சந்தானத்தை கூட்டணிசேர்த்துள்ளதாகவும், இசை அமைப்பாளராக,
யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கோடம்பாக்கம்
வட்டாரம் கூறுகிறது. கமலின் இந்த புதிய கூட்டணி, அவரின் ரசிகர்களிடையே,
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த ஆண்டு காதல்
திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் பிரசன்னா சினிமாவில்
நடிக்க முழு சுதந்திரம் கொடுத்ததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து
வந்தார் சினேகா. அதுமட்டுமில்லாமல் விளம்பரம், டிவி நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்று நடித்து வந்தார்.
இந்நிலையில், சினேகா கர்ப்பமாகியிருக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில்
பரவி வருகிறது. அவர் கர்ப்பமாகியிருப்பதால் குழந்தை பிறந்து 2 வயது ஆகும்
வரை இனி எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல்
வெளியாகியுள்ளது.
தற்போது சினேகா நடித்துக் கொண்டிருக்கும் ஒருசில படங்களின்
படப்பிடிப்புகளை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டில் தங்கி ஓய்வெடுக்கப்
போகிறாராம்.
சினேகா கர்ப்பமாகியிருக்கும் செய்தி கேட்டு அவரது கணவர் பிரசன்னா
மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். மனைவி சினேகாவுக்கு பிடித்தமான உணவு
வகைகளை வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக வைத்துள்ளாராம் பிரசன்னா.
எது, எப்படியோ இன்னும் இரண்டு வருடங்கள் சினேகாவை திரையில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம்தான்.